அச்சம் இல் என்றுச் சொன்னாய்
அதன் தாக்கம் உணர்த்திட
புவி வான் அதிரச் சொன்னாய்....
மிச்சம் எடுத்துக் கொண்டோம்
எங்கள் அச்சம் மறந்துப்
பழி பாவங்கள் கொண்டோம்....!
அக்னிக் குஞ்சொன்றுக் கண்டாய்
அதன் ஆக்கம் உணர்த்திட
காடு தகித்ததென்றாய்....
இங்கேயும் கனலாகும் காடு
எங்கள் நெஞ்சத்தில் எரிகின்ற
பொல்லாத வஞ்சத்தில்....!
உந்தன் காலத்தின் மறைவிற்குள்
தமிழ் எழுத்தினால் எழுதிட
எதைத் தான் மறந்தாய்....
உன்னைக் காலனும் எடுத்தப்பின்
இந்தக் காலத்தின் ஓட்டத்தில்
நாங்கள் உனையே மறந்தோம்....!