அன்பு


கேட்டும் கிடைத்திடா அன்பும் 
கொடுத்ததும் புரியப்படா அன்பும் 
வெறுத்தும் திணிக்கப்படும் அன்பும் 
கொடுமையானது...
வெறுமையானது...

ஜனனி

 

எண்ணில் கணிதம் இணைகின்ற வினையில்
என்னவனின் இதயம் லயித்ததாலே
தமிழற்ற ஜ-கரம் முதலெழுத்தாக
ஜனித்து விட்டாள் 'ஜனனி' என் மகளாக....

கல்லூரி


சிலிர்த்திடும் கல்லூரி நாட்களை
சிந்தையில் சேமித்து
கிளறுகையில் சிக்கியதும்
சலித்ததில் மீந்ததும்
நீங்கள் தான்....!!!