என்ன கண்டாய்...?!



இதயங்கள் பிரிவதின்
வலிகள் உணர்ந்திருந்தும்
பிரிவினை அளிப்பதில்
சுகங்கள் என்ன கண்டாய்...?!

பழி தீர்த்தது

நான் தானே என்றும்...
அவள் தானே என்றும்...
நமக்குள் என்னவென்றும்...
காரணங்கள் கற்பித்து
தண்டனைத் தப்பிய
தவறுகள் அனைத்தும்...
ஒன்று கூடி
ஓர் நாள் கர்ஜித்தது...!
.
கைவசம் கேடயமின்றி
சரணடைந்தேன்...!
.
செய்த பாவம்
பாவம் பாராது
பழி தீர்த்தது...!
.
குடியுரிமை பறிக்கப்பட்டும்
குடியானவள் போல்
நான்...!

கர்வமே மிஞ்சியது

எதையும்
எதிர் பாரா நட்பில்
நேசம்
எதிர் நோக்கிய பிழை...
இதோ
உன் பொருட்டு
என் நேசம் முழுமை
என்ற கர்வம் மட்டுமே
மிஞ்சியது...!!!