என்னவென்பது...

விடாது என்னை நீ
தழுவிச் செல்வதால்
உன்னை நான்
நேசம் என்பதா....???
உன் காதலுக்காய்
என்னை நீ
பிரிந்துச் செல்வதால்
உனையே நட்பு என்பதா....???

துணை


தோழமையும்
தோள் திணவும்
விட்டுச் சென்ற போதும்
என் தனிமை
எனக்கென்று
துணைக்கிருக்கையில்
நான் தனித்திருப்பதாய்க் கூறி
உன்னைத் துணைக்கழைத்தது யார்....????