Bagavathy
கண்ணுக்குத் தெரியாமல்
கள்ளனாய் உறவாடி...
நெஞ்சத்தின் நினைவுகள்
அறியாது களவாடி...
சிந்தையின் சிதறலாய்
சில பொழுதே வந்தோடும்
கனவே...
உன்னோடு சின்னதாய் ஓர் உடன்படிக்கை...
கையேடு ஏதுமில்லா ஒரு கனவு அறிக்கை...
எங்கேயும் திருடாமல்
எல்லைகள் மீறாமல்
விரல்கள் நீட்டிடினும்
மூக்கின் நுனி உரசாமல்...
உள்ளத்தின் உணர்வுகள் பகிர்கிறேன்...
என்னோடு உறவாட உன்னை விழிக்கிறேன்...
பள்ளியறை பாடம் தாண்டி
மரத்தடியை வருடி விட்டு....
இறுதி முகம் பார்த்த அந்த
கணக்குப் பரீட்சை மறைத்துவிடு...
நேசமுகம் காட்டும் அந்த
குட்டி சண்டை காட்டி விட்டு...
எங்கேயேனும் காண ஏங்கும்
ஏக்கங்கள் தவிர்த்து விடு....
கல்லூரி சாலை நிறையும்
பூவிதழ்கள் நுகர்ந்து விட்டு...
பாதங்கள் பட்டு வந்த
சுவடுகள் அழித்து விடு...
கூடி பேசி சிரித்து சிலிர்த்த
நட்புணர்வைப் படித்து விட்டு...
வேறு திசையாய் விரிந்து பிரிந்த
நண்பர்கள் புரட்டி விடு...
கை கோர்த்து நடைபயின்ற
நினைவலைகள் மீட்டி விட்டு...
அவள் விரல் பிரிந்த வேதனைகள்
தொடாமல் நகர்ந்து விடு...
உறவாக உணர்வாக
சொன்ன கதை படம் காட்டி...
ஊராகி போய் விட்ட
செய்தியினை மறைத்து விடு...
இணக்கமாய் இனிதே செல்லும்
ரயில் பயணம் ஓட்டி விட்டு...
பயணம் முழுதும் விலகி ஓடும்
தண்டவாளம் நிறுத்தி விடு...
கள்ளனாய் உறவாடி...
நெஞ்சத்தின் நினைவுகள்
அறியாது களவாடி...
சிந்தையின் சிதறலாய்
சில பொழுதே வந்தோடும்
கனவே...
உன்னோடு சின்னதாய் ஓர் உடன்படிக்கை...
கையேடு ஏதுமில்லா ஒரு கனவு அறிக்கை...
எங்கேயும் திருடாமல்
எல்லைகள் மீறாமல்
விரல்கள் நீட்டிடினும்
மூக்கின் நுனி உரசாமல்...
உள்ளத்தின் உணர்வுகள் பகிர்கிறேன்...
என்னோடு உறவாட உன்னை விழிக்கிறேன்...
பள்ளியறை பாடம் தாண்டி
மரத்தடியை வருடி விட்டு....
இறுதி முகம் பார்த்த அந்த
கணக்குப் பரீட்சை மறைத்துவிடு...
நேசமுகம் காட்டும் அந்த
குட்டி சண்டை காட்டி விட்டு...
எங்கேயேனும் காண ஏங்கும்
ஏக்கங்கள் தவிர்த்து விடு....
கல்லூரி சாலை நிறையும்
பூவிதழ்கள் நுகர்ந்து விட்டு...
பாதங்கள் பட்டு வந்த
சுவடுகள் அழித்து விடு...
கூடி பேசி சிரித்து சிலிர்த்த
நட்புணர்வைப் படித்து விட்டு...
வேறு திசையாய் விரிந்து பிரிந்த
நண்பர்கள் புரட்டி விடு...
கை கோர்த்து நடைபயின்ற
நினைவலைகள் மீட்டி விட்டு...
அவள் விரல் பிரிந்த வேதனைகள்
தொடாமல் நகர்ந்து விடு...
உறவாக உணர்வாக
சொன்ன கதை படம் காட்டி...
ஊராகி போய் விட்ட
செய்தியினை மறைத்து விடு...
இணக்கமாய் இனிதே செல்லும்
ரயில் பயணம் ஓட்டி விட்டு...
பயணம் முழுதும் விலகி ஓடும்
தண்டவாளம் நிறுத்தி விடு...
Bagavathy
முழு மதியின் தாரகையோ
புவி முழுதின் தேவதையோ...
மழலை மொழி பிதற்றும்
தமிழ் மொழியின் காவியமோ...
செல்ல சினுங்கலிலே
மொட்டவிழ்க்கும் பூ மலரோ...
கோப தொனி தொடக்கும்
மை இமையின் கண்ணழகோ...
பச்சரிசி பல் வரிசை
பால் மணத்தின் சான்றிதழோ...
அலையலையாய் கூந்தல் கண்டே
கார் முகிலும் ஏங்கியதோ...
சப்பாணி கொட்டும் கைகள்
பட்டின் மென்மை போன்றதுவோ...
கிள்ளை மொழியின் குரலில்
குயிலின் கானம் தோற்றதுவோ...
என் முன் ஜென்ம
மா தவத்தின்
புண்ணியம்
நீ என் மகளோ....
புவி முழுதின் தேவதையோ...
மழலை மொழி பிதற்றும்
தமிழ் மொழியின் காவியமோ...
செல்ல சினுங்கலிலே
மொட்டவிழ்க்கும் பூ மலரோ...
கோப தொனி தொடக்கும்
மை இமையின் கண்ணழகோ...
பச்சரிசி பல் வரிசை
பால் மணத்தின் சான்றிதழோ...
அலையலையாய் கூந்தல் கண்டே
கார் முகிலும் ஏங்கியதோ...
சப்பாணி கொட்டும் கைகள்
பட்டின் மென்மை போன்றதுவோ...
கிள்ளை மொழியின் குரலில்
குயிலின் கானம் தோற்றதுவோ...
என் முன் ஜென்ம
மா தவத்தின்
புண்ணியம்
நீ என் மகளோ....
Bagavathy
சடசடக்கத் துடிக்கும்
ஆவலை கொஞ்சம்
தலை தட்டினேன்....
மௌனத்தை மீறியே
பரவிடும் வெறுமையை
கையாழ்வதரியதுபதை பதைக்கிறேன்....
வெறுமையைத் தாண்டியும்
நெஞ்சினை நிரப்பிடும்
உன் நினைவுகள்
மறைப்பதென் அகங்காரமே....
'எனை மறந்தே போனாயோ ?'
என்கின்ற கேள்வியை
மறைப்பதற்கே இந்த
அகங்காரம் என்கின்ற அரிதாரமே...
Subscribe to:
Posts (Atom)