புதிர்



ஏழு திங்கள்
மூடித் திளைத்த புதிர்
இன்னும் மூன்றே மாதத்தில்
முடிச்சவிழ்க்கும்
நீ
என் அவனா
என் அவளா
என்று....

அச்சம்


உன் பிரிவின்
கணம் தாக்கும்
துயர் கண்டு
அஞ்சவில்லையடி....
அத்துயரின்
வலி தாங்கும்
வல்லமைக் கிட்டிடுமோ
என்ற அச்சம் தான் 
எனக்கு...!

உணர்வுகள்

உன்னில் உணர்ச்சிகள்
நீர்த்துப் போகும் வேளையிலேனும்
நெஞ்சில் உணர்வுகள் மிளிர்ந்திட செய்...!
தத்தளித்திடும் சமயங்களில்
தாங்கிடும் உணர்வுகள் தேடி சலிக்கிறேன்

எதிர்மறை


உனக்கான கதவை
நீ திறந்த போது
எனக்கான சன்னலைச்
சாத்தி விட்டுப் போனாய்

சிரிப்பு


இப்பொழுதெல்லாம் சற்று
அதிகமாகவே அழுத்தமாகச்

சிரிக்கிறேன்...
அதில்
என் கண்ணீரின் பொருள்
மறைந்து மாறியது...!