sofi
ஏழு திங்கள்
மூடித் திளைத்த புதிர்
இன்னும் மூன்றே மாதத்தில்
முடிச்சவிழ்க்கும்
நீ
என் அவனா
என் அவளா
என்று....
sofi
உன் பிரிவின்
கணம் தாக்கும்
துயர் கண்டு
அஞ்சவில்லையடி....
அத்துயரின்
வலி தாங்கும்
வல்லமைக் கிட்டிடுமோ
எனக்கு...!
sofi
உன்னில் உணர்ச்சிகள் நீர்த்துப் போகும் வேளையிலேனும்நெஞ்சில் உணர்வுகள் மிளிர்ந்திட செய்...! தத்தளித்திடும் சமயங்களில் தாங்கிடும் உணர்வுகள் தேடி சலிக்கிறேன்
sofi
உனக்கான கதவை
நீ திறந்த போது
எனக்கான சன்னலைச்
சாத்தி விட்டுப் போனாய்
sofi
இப்பொழுதெல்லாம் சற்று
அதிகமாகவே அழுத்தமாகச் சிரிக்கிறேன்...அதில்என் கண்ணீரின் பொருள் மறைந்து மாறியது...!