மழையோடு...

தூரத்து மழைத் துளியின் 
சந்தோஷ தூத்தல்கள்...
அதை ஏந்தும் எண்ணத்தில் 
மண் சொட்டும் வாசங்கள்... 
இமை மூடி எனைத் தழுவும் 
பனி காற்றின் ஜாலங்கள்... 
இரவோடு இரகசியமாய் 
நெஞ்சத்தின் பேத்தல்கள்... 

கனவு !




இமை இடுக்கில் 
இடைபடும் கண்ணில் 
கனியாத கலையாத 
கசிந்தோடும் கனவு !

பிறை நிலா முகம் !

மச்சி மதில்களில்
எட்டி உதித்திடும்
பிறை நிலா முகம்

மின்னித் தெறித்திட
என்னைத் தேடிடும்
மையிரு விழி

கண்ட நொடியினில்
வில்லென வளைந்திடும்
புன்னகை இதழ்

எட்டா தொலைவினை
தவழ்ந்தே சேர்ந்திடும்
முத்தத் துளி

சத்தம் இல்லாமல்
கைகள் ஆடிடும்
Zib zab zoom

நிச்சய வருகைகாய்
சத்தியம் கேட்டிடும்
உள்ளங்கனி

கடந்த பின்னரும்
எந்தன் மனதினுள்
அந்த சில நொடி

மழைத் துளி !

மழைத் துளி !
என் கண்ணீரைத் தேக்கி மறைத்த
கண்களின் கடவு சொல் !

எங்கே சென்றாய்...

எங்கே சென்றாய் பெண்ணே...
என் தனிமைகளையும்
உன்னோடு மூட்டைக் கட்டிக் கொண்டு
எங்கே சென்றாய்...
உன்னை அழைத்தும்...
அலைந்தும்..,
கரைகிறேன்..
கரை சேர்க்க இல்லது போனாலும்
ஒரு முறை என்னூடே
நீந்தி போ...