வெங்காயம்


பெரியாரின் எளிமைக் காட்டில்
இப்படி ஒரு விலை ஏற்றமா...?!

முன்னமே தெரிந்திருந்தால்
சிக்கனம் கருதி
சொல்லாமல் விட்டிருப்பார்
வெங்காயம்....!

பொறாமை

நம் விலகலின் சான்றிற்காய்
ஒரு துளி நீரேனும்
சொரிந்திருப்பாய்
நினைவலைகள் புரட்டியிருப்பாய்
சில பொழுது வெறித்திருப்பாய்
ஆயினும் அதனை
இயல்பாக ஏற்றிருப்பாய்...!
மாற்றத்தில் மருகாது
நயமாய் ஏற்றதடி உன் மனம்
சற்றே பொறாமை தான்
உன் மனம் மீது....!!!