உன் நட்பில் இணைவதாய் எண்ணி கைக் கோர்த்திட முயன்றேன்... விரல் வேர்ப்பதாய்க் கூறி பிடி தளர்த்திச் சென்றாய்... தேடல் தொடங்கிய நானே தொலைந்தவளாகியும் போனேன்...
என் உயிர் உடல் பிரியும் வேளையில் உன் விழி நீர் சொரியும் நொடியினில் என் தோள் மீது உன் தலை சாய்த்திடு அந்த கணத்திலேனும் உன் தீண்டலும்... என் தேடலும்... நம் தோழமையும்... முழுமைப் பெற்றதாய் என் ஆன்மா சில்லிடட்டும்...