உணர்வுகள்

வார்த்தைகள் உரைக்காமல் முடக்கப்படலாம்...
பார்வைகள் இமைகளால் மறைக்கப்படலாம்...
உணர்ச்சிகள் வெளிப்படாமல் ஒடுக்கப்படலாம்...
ஆனால் உணர்வுகள்........
உணர்வுகளாய் நான்......

ஆறில் மூன்று....


ஏன் பூக்களெல்லாம் இன்று
அழகாய் இதழ் மலர்கின்றன...?
ஓ...!!!
மலர்களின் ராணி இன்று தான்
ஜனித்தாள் என்பதாலா.....?!

தொடு வானம்

நீர் கோர்த்த விழியோடு நானும்
துடைத்தெறியும் விரலோடு நீயும்
தொடும் தூரம் தொலைவானம் தானோ
வான் தொடஏங்கும் கடலலையும் நானோ

உனக்காக...


என் ஒவ்வொரு பிறப்பிலும்
நீ எனக்குக் கிடைப்பாய் எனில்
நொடிக்கொரு தரம்
இறந்துப் பிறக்கவும் நான் தயார்

ஏன் மறந்தாய் ?


ஏன் மறந்தாய்.....?
என்னில் முதல் தடுமாற்றம்
என் தமிழில் முதல் வரிச்சேதம்

அவள்....!!!


அவள்....!!!
நான் தினம் தினம்
என் எழுத்துக்களால் வடிக்க முயன்றும்
என்னைத் தோற்கடிக்கும்
என் அழகான தேவதை....!

நிலா....


நிலவே....!
நான் துயில
ஊஞ்சல் வேண்டுமென்றா
நீ தினம்
பிறையெனத் தேய்கிறாய்....???

காத்திருந்த நொடிகள்...


நாட்கள் கடந்தது ஒருவழியாய்
நொடிகள் கடத்துதல் தான் தவமாய்
உன்முகம் தன்னை நோக்குதல் யுகக்கனவாய்
என் விழி நோக்கி வழிகளும் தேயந்ததுவா.....

புன்னகை :)

வானவில் நிமிர்ந்து ஊஞ்சலாகும்
நிலவும் தேய் பிறை இன்றி வாழும்

பூக்களின் வாழ்நாள் நீண்டு கூடும்
வாளின் கூர் முனை அற்று வீழும்
ஆதலின் புன்னகையால் போர் செய்க..... :)

ஒரே பார்வை...


பத்தே நொடி
நீ தொடுத்த கூரிய விழி
சில நொடியில் செத்தேனடி
விழித்தெழ ஏது வழி....