Bagavathy
உனக்கான கதவை
நீ திறந்த போது
எனக்கான சன்னலைச்
சாத்தி விட்டுப் போனாய்
Bagavathy
இப்பொழுதெல்லாம் சற்று
அதிகமாகவே அழுத்தமாகச் சிரிக்கிறேன்...அதில்என் கண்ணீரின் பொருள் மறைந்து மாறியது...!
Bagavathy
சிதைந்த முகம் போல்
என் நிழற்படம் பதித்த
அட்டை இருந்தும்...
இரு மூன்று முறை
நகம் பதித்து மறைந்த
கரு-மைக் கறை இருந்தும்...
மிக நீண்ட பட்டியலின்
ஒரு முனையினில் கூட
என் பெயர் காணாது போனது...!
நேர்மை தவறி
எவரிடம் செல்லுமோ
ஓர் ஆயிரம் ரூபாயும்
ஒரு பிரியாணிப் பொட்டலமும்
எனது ஓட்டும்...!