Bagavathy
ஏழு திங்கள்
மூடித் திளைத்த புதிர்
இன்னும் மூன்றே மாதத்தில்
முடிச்சவிழ்க்கும்
நீ
என் அவனா
என் அவளா
என்று....
Bagavathy
உன் பிரிவின்
கணம் தாக்கும்
துயர் கண்டு
அஞ்சவில்லையடி....
அத்துயரின்
வலி தாங்கும்
வல்லமைக் கிட்டிடுமோ
எனக்கு...!
Bagavathy
உன்னில் உணர்ச்சிகள் நீர்த்துப் போகும் வேளையிலேனும்நெஞ்சில் உணர்வுகள் மிளிர்ந்திட செய்...! தத்தளித்திடும் சமயங்களில் தாங்கிடும் உணர்வுகள் தேடி சலிக்கிறேன்
Bagavathy
உனக்கான கதவை
நீ திறந்த போது
எனக்கான சன்னலைச்
சாத்தி விட்டுப் போனாய்
Bagavathy
இப்பொழுதெல்லாம் சற்று
அதிகமாகவே அழுத்தமாகச் சிரிக்கிறேன்...அதில்என் கண்ணீரின் பொருள் மறைந்து மாறியது...!
Bagavathy
சிதைந்த முகம் போல்
என் நிழற்படம் பதித்த
அட்டை இருந்தும்...
இரு மூன்று முறை
நகம் பதித்து மறைந்த
கரு-மைக் கறை இருந்தும்...
மிக நீண்ட பட்டியலின்
ஒரு முனையினில் கூட
என் பெயர் காணாது போனது...!
நேர்மை தவறி
எவரிடம் செல்லுமோ
ஓர் ஆயிரம் ரூபாயும்
ஒரு பிரியாணிப் பொட்டலமும்
எனது ஓட்டும்...!
Bagavathy
பெரியாரின் எளிமைக் காட்டில்
இப்படி ஒரு விலை ஏற்றமா...?!முன்னமே தெரிந்திருந்தால் சிக்கனம் கருதி சொல்லாமல் விட்டிருப்பார் வெங்காயம்....!
Bagavathy
நம் விலகலின் சான்றிற்காய் ஒரு துளி நீரேனும் சொரிந்திருப்பாய் நினைவலைகள் புரட்டியிருப்பாய் சில பொழுது வெறித்திருப்பாய் ஆயினும் அதனை இயல்பாக ஏற்றிருப்பாய்...! மாற்றத்தில் மருகாதுநயமாய் ஏற்றதடி உன் மனம் சற்றே பொறாமை தான் உன் மனம் மீது....!!!