அணை

அணைக்கத் துடித்த
நிலமகன் ஏங்க...
இணையத் தவிக்கும்
நதி இவள் தேங்க...
பிரித்தாண்டிடும்
மனிதனின் நெஞ்சம்...
அணையென மாறித்
தடுத்தாண்டதே வஞ்சம்...!

எதுவும் இல்லாமலும்....

அரசாணைக் கோப்புகள் இல்லை
அதிகாரிகள் கையொப்பம் இல்லை
தனி நிதி ஒதுக்கீடும் இல்லை
ஆயினும் சென்னையில்
ஒரே நாள் மழை வரத்தால்
அத்தனைப் பேருந்துகளும்
மிதவைப் பேருந்துகளாய்....!!!

தேடல்...

உன்னை
நான்
எங்கெங்கோ
தேடித் தொலைகிறேன்...!!
நீ
வேறிடம்
தேடித் தொலைவதுத்
தெரிந்தும்
தெரியாதவளாய்....