விட்டில் பூச்சிகள்

பளபளப்பாய் முகம் பிரதிபலித்தும்
துளி நீரற்று வரண்டுப் போன
காலிக் குடங்களும்....


தொடர்பு கொள்ள இணைப்பு இருந்தும்
இயக்கம் கொள்ள மின் அற்ற
தொலைக்காட்சிப் பெட்டியும்....


ஐந்தின் பின் இரு சுழி இருந்தும்
பருப்பின் முன் மதிப்பற்றுப் போன
காந்திக் காகிதமும்.....

வாக்காளனை நோக்கி
ஒருசேர உரக்க உரைத்தது
'விளக்கில் வீழும் விட்டில் பூச்சிகளா...' என்று

0 comments:

Post a Comment