தவம்

இலை உதிர்வதாலே
கிளை மடிவதில்லை...
மழைத் துளியின்
ஈரம் வரும் வரை
தவம் முடிவதில்லை...

கண்ணத்தில் முத்தமிட்டால் + பொன்னியின் செல்வன்

(கண்ணத்தில் முத்தமிட்டால் படமும் பொன்னியின் செல்வனும் ஒரே நேரத்தில் என்னை சந்தித்ததின் விளைவு கீழே)

மறத்தினில் அறம் கொண்டு
பள்ளிப்படை ஏன் சென்றாய்
ஏலேல சிங்கா...

போரினில் விலக்கமைத்துப்
பகைகுடி ஏன் காத்தாய்
ராஜ ராஜா...

கருவறுப்பான் என அறிந்திருந்தால்
உறவருத்திருப்பீரோ
பாண்டிய மன்னா....

பிற்காலம் நடப்பதை அக்காலம் அறிந்தாரில்லை...

ஓ இனங்களே...
பிற்காலம் நடப்பதை இக்காலமும் அறிந்தாரில்லை !!!