முழு மதியின் தாரகையோ
புவி முழுதின் தேவதையோ...
மழலை மொழி பிதற்றும்
தமிழ் மொழியின் காவியமோ...
செல்ல சினுங்கலிலே
மொட்டவிழ்க்கும் பூ மலரோ...
கோப தொனி தொடக்கும்
மை இமையின் கண்ணழகோ...
பச்சரிசி பல் வரிசை
பால் மணத்தின் சான்றிதழோ...
அலையலையாய் கூந்தல் கண்டே
கார் முகிலும் ஏங்கியதோ...
சப்பாணி கொட்டும் கைகள்
பட்டின் மென்மை போன்றதுவோ...
கிள்ளை மொழியின் குரலில்
குயிலின் கானம் தோற்றதுவோ...
என் முன் ஜென்ம
மா தவத்தின்
புண்ணியம்
நீ என் மகளோ....
புவி முழுதின் தேவதையோ...
மழலை மொழி பிதற்றும்
தமிழ் மொழியின் காவியமோ...
செல்ல சினுங்கலிலே
மொட்டவிழ்க்கும் பூ மலரோ...
கோப தொனி தொடக்கும்
மை இமையின் கண்ணழகோ...
பச்சரிசி பல் வரிசை
பால் மணத்தின் சான்றிதழோ...
அலையலையாய் கூந்தல் கண்டே
கார் முகிலும் ஏங்கியதோ...
சப்பாணி கொட்டும் கைகள்
பட்டின் மென்மை போன்றதுவோ...
கிள்ளை மொழியின் குரலில்
குயிலின் கானம் தோற்றதுவோ...
என் முன் ஜென்ம
மா தவத்தின்
புண்ணியம்
நீ என் மகளோ....