என் மகள்

முழு மதியின் தாரகையோ
புவி முழுதின் தேவதையோ...

மழலை மொழி பிதற்றும்
தமிழ் மொழியின் காவியமோ...

செல்ல சினுங்கலிலே
மொட்டவிழ்க்கும் பூ மலரோ...

கோப தொனி தொடக்கும்
மை இமையின் கண்ணழகோ...

பச்சரிசி பல் வரிசை
பால் மணத்தின் சான்றிதழோ...

அலையலையாய் கூந்தல் கண்டே
கார் முகிலும் ஏங்கியதோ...

சப்பாணி கொட்டும் கைகள்
பட்டின் மென்மை போன்றதுவோ...

கிள்ளை மொழியின் குரலில்
குயிலின் கானம் தோற்றதுவோ...

என் முன் ஜென்ம
மா தவத்தின்
புண்ணியம்
நீ என் மகளோ....

அகங்காரம்

உன் மௌனத்தைக் கிழித்து
சடசடக்கத் துடிக்கும்
ஆவலை கொஞ்சம்
தலை தட்டினேன்....

மௌனத்தை மீறியே
பரவிடும் வெறுமையை
கையாழ்வதரியது
பதை பதைக்கிறேன்....

வெறுமையைத் தாண்டியும்
நெஞ்சினை நிரப்பிடும்
உன் நினைவுகள்
மறைப்பதென் அகங்காரமே....

'எனை மறந்தே போனாயோ ?'
என்கின்ற கேள்வியை
மறைப்பதற்கே இந்த
அகங்காரம் என்கின்ற அரிதாரமே...