அகங்காரம்

உன் மௌனத்தைக் கிழித்து
சடசடக்கத் துடிக்கும்
ஆவலை கொஞ்சம்
தலை தட்டினேன்....

மௌனத்தை மீறியே
பரவிடும் வெறுமையை
கையாழ்வதரியது
பதை பதைக்கிறேன்....

வெறுமையைத் தாண்டியும்
நெஞ்சினை நிரப்பிடும்
உன் நினைவுகள்
மறைப்பதென் அகங்காரமே....

'எனை மறந்தே போனாயோ ?'
என்கின்ற கேள்வியை
மறைப்பதற்கே இந்த
அகங்காரம் என்கின்ற அரிதாரமே...

0 comments:

Post a Comment