முரண்

சமயத்தில் நினைக்கையில்
ரணமாகிப் போனது மனசு...
மனசே நடிக்கையில்
என்னதான் செய்யும் என் உசிரு...
*
உன் கடலின் இரைச்சலில்
செவிடாகிப்போனது
என் செவியோ...?
ஆழ் கடலின் மொழி போல்
மௌனித்திருப்பதே
என் நிலையோ...?!
*
புவி நோக்கும் மழையாய்
உன்னில் பாய்வதால்
எனக்கென்ன லாபம்...?
நிலம் புகும் நீர் போல்
உன்னில்தொலைவதற்கு
எதற்கிந்த வேகம்...?!
*
அன்பு ஊற்றையும்
விழுங்கி அமிழ்க்க
நீ கடும் பாலையோ...?
உன்னில் கானல் நீராயினும்
வெளிப்பட எத்தனிப்பதே
என் வேலையோ...?!

0 comments:

Post a Comment