போவதும்
நேசம் என்றேன்
*
உரைக்காது ஆழ்நெஞ்ச
உணரலே
நேசம் என்றேன்
*
நெஞ்சத்தின் உணர்தலுக்காய்
உரைப்பதும்
நேசம் என்றேன்
*
உரைத்தபின் உணராததாய்
நடிப்பதும்
நேசம் என்றேன்
*
உரைப்பினும் உணரப்படாது
போவதும்
நேசம் என்றேன்
*
உரைத்தது துவேசமாய்
உணர்ந்திடினும்
அதுவும் நேசமே என்கிறேன்
4 comments:
anubavangalin unarchigalo?
excellent bugs.. amazing..
thank u gayu...
நானும் நேசமே என்கிறேன்....
Post a Comment