பழி தீர்த்தது

நான் தானே என்றும்...
அவள் தானே என்றும்...
நமக்குள் என்னவென்றும்...
காரணங்கள் கற்பித்து
தண்டனைத் தப்பிய
தவறுகள் அனைத்தும்...
ஒன்று கூடி
ஓர் நாள் கர்ஜித்தது...!
.
கைவசம் கேடயமின்றி
சரணடைந்தேன்...!
.
செய்த பாவம்
பாவம் பாராது
பழி தீர்த்தது...!
.
குடியுரிமை பறிக்கப்பட்டும்
குடியானவள் போல்
நான்...!

0 comments:

Post a Comment