மே 2009

விடியல் வேண்டி
வன்னி கதறியபோது
கிழக்கு மட்டும்
கொஞ்சம் சிவந்தது...!
அதைக் காண உயிர்கள்
கொஞ்சமும் இலாது...!
வானமும் வெளுத்தது
வெட்கம் இலாது...!
*
மரித்துப் போன மனிதரும்
மாண்டு விட்ட நேயமும்
மகுடி வாசித்த சுற்றமும்
மறுத்தளித்த தாய் இனமும்
கொட்டிக் கொடுத்தன காரணங்கள்...
சோகத்தில் வடிக்கக் காவியங்கள்...!!!
*
இரங்கல் கூட்டம் தொடுக்க
மிச்சம் இல்லா மனிதம்...
இறந்தோர் எண்ணிக்கை எடுக்க
தைரியம் இல்லா இதயம்...
*
தேவனின் தீர்ப்பிற்காக
இன்னும் எத்தனை எழுதுகோலின்
முனையைத் தான் உடைக்க...?????
*
உலகம் விழிக்க
இதோ உரக்க உரைக்கிறேன்
ஒரு வரி....
*
ஓர் இனத்தின் சவக்குவியல் மேல்
சம்மணமிட்டுக் கவிதை கிறுக்குகிறேன்...!!!!

2 comments:

Unknown said...

hmm..intha visayathula enaku avalo periya patruthal ilainalum ne elithina kavithaingarathunala paduchu parthen...hmm nalla therndha kavingnarukuriya vaasam iruku..keep it up..

Bagavathy said...

thank u sathish :)

Post a Comment