வெங்காயம்


பெரியாரின் எளிமைக் காட்டில்
இப்படி ஒரு விலை ஏற்றமா...?!

முன்னமே தெரிந்திருந்தால்
சிக்கனம் கருதி
சொல்லாமல் விட்டிருப்பார்
வெங்காயம்....!

பொறாமை

நம் விலகலின் சான்றிற்காய்
ஒரு துளி நீரேனும்
சொரிந்திருப்பாய்
நினைவலைகள் புரட்டியிருப்பாய்
சில பொழுது வெறித்திருப்பாய்
ஆயினும் அதனை
இயல்பாக ஏற்றிருப்பாய்...!
மாற்றத்தில் மருகாது
நயமாய் ஏற்றதடி உன் மனம்
சற்றே பொறாமை தான்
உன் மனம் மீது....!!!

ஆண்டு இறுதியில்

ஓர் ஆண்டின்
பயண கடைசியில்
மனம் மறக்க
ஒன்றிரண்டை விட்டுவிட்டும்
மகிழ்ந்திருக்க
சிலவற்றைச் சுமந்து கொண்டும்...
காலத்தைக் கடக்கிறோம்...!
நம் உறவின்
விரிசலைப் போலவும்...
மனதில்
உன் நினைவுகள் போலவும்...

என்ன கண்டாய்...?!



இதயங்கள் பிரிவதின்
வலிகள் உணர்ந்திருந்தும்
பிரிவினை அளிப்பதில்
சுகங்கள் என்ன கண்டாய்...?!

பழி தீர்த்தது

நான் தானே என்றும்...
அவள் தானே என்றும்...
நமக்குள் என்னவென்றும்...
காரணங்கள் கற்பித்து
தண்டனைத் தப்பிய
தவறுகள் அனைத்தும்...
ஒன்று கூடி
ஓர் நாள் கர்ஜித்தது...!
.
கைவசம் கேடயமின்றி
சரணடைந்தேன்...!
.
செய்த பாவம்
பாவம் பாராது
பழி தீர்த்தது...!
.
குடியுரிமை பறிக்கப்பட்டும்
குடியானவள் போல்
நான்...!